தொழில்நுட்ப புரட்சியில் மனிதன் இன்று உச்சியில் நிற்பது நான் சொல்லியோ அல்லது நீங்கள் சொல்லியே தெரிய வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை. இன்று நாங்கள் விதவிதமான தொழில்நுட்ப கடலில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் உலகில் மிகப்பிரபலமான IBM எனப்படும் கம்பனி புதியவகையான மனித மூளைக்கு (cognitive computing) சமனான சிப் ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கியுள்ளார்கள்
இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
சிக்கல் நிறைந்த தரவுகளை உணர்தல், சூழலை உணர்தல், இலக்குகளை அறிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், உரிய பதிலை வழங்குதல் ஆகியவை என இதனை தயாரித்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கையான நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் திகழுமென என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக 6வருடங்களாக 100 ஆராய்ச்சியாளர்கள் பங்கு பற்றி அவர்களுடைய இலக்கினை அடைந்துள்ளனர். 41 மில்லியன் நிதியின் அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சிக்கான திட்ட முகவர் நிலையமும் IBM அமைப்பும் அனுசரணை வழங்கியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்ட வேண்டும்.
0 comments:
Post a Comment