ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான முறையில் படுகொலைகள் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் அறி்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என நான் எதிர்பார்க்கிறேன்.
குறிப்பாக சொல்லப்போனால் ஈராக், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இவ்வாறான பல்வேறுபட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்காக புரட்சியாளர்கள் என்ற போர்வையில் போராட்டங்களும், படுகொலைகளும் நடந்தேத்தான் இருக்கிறது.
பஞ்சமா பாதக செயல்களை செய்யுமாறு எந்த மதங்களோ சொல்லவில்லை ஆனால் மதங்கள் அதனை தடுத்துள்ளன. இருந்தும் இந்த மனிதன் செயற்பாடுகள் நாளாந்தம் இவ்வாறான கோலத்தில் தன்னை உட்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
பல வருடங்களாக ஆப்கானிஸ்தானில் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளது. அதற்கான காரணங்கள் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
நான் இணையத்தில் உளாவிக் கொண்டிருக்கும் போது பல்வேறுபட்ட காணொளிகள் என் கண்ணுக்குப் படும். அதனை என்னுடைய இணையத்தள வாசகர்களும் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு அதனால் இந்த உண்மைச் சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.
அதாவது ஆப்கானிஸ் பக்கத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உள்ளது. அத்துடன் சில பகுதிகளில் தலிபான் இயக்கத்தினரின் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன. அங்கு அடிக்கடி பொலிஸார் தலிபான்களை சுடுவதும் தலிபான்கள் பொலிசாரைச் சுடும் என்பதும் சர்வதாரனமாகிவிட்டது,
இந்த வகையில் அவ்வாறு நேரடியாவே பல பாகிஸ்தானிய 16 பொலிசாரை நேரடியாக அணியாக வைத்துவிட்டு சுட்டு வீழ்த்தும் காணொளி என்னுடைய இணையத்தள வாருகையாளருக்காக நான் வழங்கியுள்ளேன்.