Google Website Translator Gadget

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)

Tuesday, September 6, 2011


நாங்கள் சுகதேகியாக இருந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் 75-80 வயது வரையுமே எங்களால் இயல்பாக நடக்கவும், ஓடவும் முடியும். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் தாத்தாவுக்கே 100 வயது வந்தாச்சி ஆனால் அவர் இன்னும் மரதன் ஓட்ட வீரனாகத் திகழ்வது தான் ஆச்சரியமாகவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா தான் உலகில் மிகவும் வயதான மரதன் ஓட்ட வீரராவார். அதாவது இவரின் சாதனைகளுக்கு வயது வரம்பு கிடையாது 2012 Edinburgh Race பதிவு செய்துள்ள முதல் நபரும் இவர் தான்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் தனது ஓட்டத்தை ஆரம்பித்த இந்த தாத்தா இன்னும் ஓய்வெடுக்க இல்லையாம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 1911 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி பிறந்த இந்த தாத்தா இந்த ஆண்டில் நுாற்றாண்டைக் கொண்டாடினார்.

இவரது உணவு என்ன தெரியுமா இஞ்சியினால் தயாரிக்கப்பட்ட உணவும், ஒரு கோப்பை தேநீரும் தான் அதனை அருந்தியவுடன் தினமும் 10 மைல் ஓடுவாராம். உங்களுக்கு முடிந்தால் 1 மைல் ஓடிப்பாருங்கள் உங்கள் உடம்பின் நிலையை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். மேலும், இந்த தாத்தா அதிக மத நம்பிக்கை கொண்டவராம். அதற்காக வேண்டி அவர் சொல்லுவது எனக்கு கடவுள் வழங்கிய வரம் என அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.




READ MORE - 100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)

அனகொண்டாவுடன் அன்பாய் விளையாடும் அதிசயம் (வீடியோ இணைப்பு)



 அன்பினால் பலவற்றை வசிப்படுத்த முடிமென பல ஆய்வுகள் மூலம் நிருவித்துள்ளான் மனிதம், மலை, மண், நில, நீர், காற்று, விலங்கு ........... இவ்வாறு பல்வேறு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் காலத்தில் பாம்மென்றால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. இங்கு நான் உங்களுக்கு காணொளியாக தரப் போவது மிகப் பயங்கரமான பாம்புடன் அதாவது அதனை அனோகொண்டா என அழைப்பார்கள் அதனுடன் அன்பாக பழகும் ஒரு காட்சியை பார்த்து இரசித்துப் பாருங்கள்


READ MORE - அனகொண்டாவுடன் அன்பாய் விளையாடும் அதிசயம் (வீடியோ இணைப்பு)

அவசரமான ஓட்டமும் அசத்தலான மா. பந்து விளையாட்டினால் மாட்டிக் கொண்ட சீனர் (பட இணைப்பு)

Sunday, September 4, 2011

சிலருக்கு எதை எங்கே எதைச் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தெரியாமல் சிலர் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்றைய நாளாந்த செயலாகி விட்டது சிலருக்கு, இந்த வகையில் சீனர் ஒருவரும். அதிவேகமாக காரை செலுத்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள பெண்ணின் மார்பாகத்தை தொட்டுவிளையாடிய மனிதர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த கமராவின் மூலம் மாட்டிக் கொண்ட பரிதாப சம்பவம் ஒன்று சீனாவில் உளள் சி்க்குள் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. 




மேலும், 80km/h வேகமே அனுமதிக்கப்பட்ட பெருந்தெருவில் 92km/h வேகத்தில் பஜிரோ ரக வாகனத்தை ஓட்டியபடி மேற்குறிப்பிட்ட செயலையும் இந்த நபர் மேற்கொண்டுள்ளார். பொலீசார் இந்த நபரை தேடி வலைவிரித்துள்ளார். 

READ MORE - அவசரமான ஓட்டமும் அசத்தலான மா. பந்து விளையாட்டினால் மாட்டிக் கொண்ட சீனர் (பட இணைப்பு)

Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

Thursday, September 1, 2011


பிரபல சமூக தளமான பேஸ்புக் தொடர்பான பல்வேறுபட்ட செய்திகளை நாளாந்தம் உங்களுக்கு தந்த வண்ணமுள்ளேன். அத்துடன் இந்த பேஸ்புக்கினைப் பயன்படுத்தி இலங்கையில் சைபர் குற்றச் செயல்களும் நடைபெறுவதாக இங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் இன்று இணையத்தின் பயன்பாடுகள் கனிசமான முன்னேற்றம் கண்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் பயனாளிகளும் அதிகமாகவே காணப்படுவர், குறிப்பாக காதல், அரட்டை மற்றும் செய்திப்பரிமாற்றம் போன்ற நல்ல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினாலும் அதனை பல்வேறு தீய நோக்கங்களுக்கும் சைபர் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என அரசாங்கத்தின் சார்பில் தகவல் தர அதிகாரியான பொறியிலாளர் பள்ளயகுருகே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை 1100 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

இலங்கையில் தனிநபர்கள் படங்களை தவறான முறையில் பயன்படுத்தல், தனிநபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக பணம் பெறுதல் தொடர்பான குற்றச் செயல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்போது இலங்கையில் பேசப்படும் சொல்லான கிறீஸ் மனிதனுடைய பெயரிலும் பேஸ்புக் கணக்கினை திறந்து அதன் ஊடாக பயனாளர்களை பயன்முறித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அது தொடர்பான கணக்குகளை உடன் நிறுத்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார். 
READ MORE - Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

True Story of Facebook Murder in Spain(காணொளி இணைப்பு)


இன்று இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. முன்னர் கணினியின் உதவியோடு மாத்திரம் நாங்கள் இணையத்தில் உலா வர முடியும் ஆனால் இப்போது கையடக்க தொலைபேசியில் அந்த வசதியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் பல்வேறு சமூக தளங்களின் ஊடாக எங்களுக்கு அறிமுகமல்லாத பல நண்பர்கள், மற்றும் நண்பிகளிடம் பல்வேறுபட்ட விதமான முறையில் உறவினை வைத்திருக்கிறோம்.

அவை சாதகமான முடிவுகைளயும் தரலாம் அல்லது மிகப்பாரதுாரமான விளைவுகளையும் தாரலாம். நீங்கள்  உங்களுடைய மின்னஞ்சல், மற்றும் அலைபேசி இலக்கங்களை வழங்கும் போது அவர்கள் அதன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு உங்கள் மனதில் ஆசைகளை வளர்த்து அது உங்களின் மரணத்திற்கு காரணமாகவும் அமையலாம்.

இவ்வாறு பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் இணைந்து ஒரு மாதுவின் உயிரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தினை உங்களுக்கு தரப்போகிறேன். இதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே தவிர மற்றும்படி அதில் நீங்கள் காமத்தை கற்பனையோ எதிர்பார்க்க வேண்டும் என உங்களுக்கு முதலில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் யாரிடமும் இலகுவில் உங்களுடைய முழுமையான தகவல்களை வழங்க வேண்டாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்

விடயத்திற்கு வருகின்றேன்..................

இந்த சம்பவம் ஸ்பையின் நாட்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒரு மாது பேஸ்புக் மூலமாக ஒரு இனைஞனிடம் தொடர்பினை மேற்கொண்டால் . மேலும் இந்த பெண் தன்னை பல்வேறு கோணங்களிலும் படமெடுத்து இந்த பேஸ்புக்கின் போட்டோ பகுதியில் போட்டிருந்தால். இதன் மூலம் இவளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணிக்கையில்லாத நண்பர், நண்பிகள் அழைப்பு கிடைத்தது. இதனால் அதிகமான நண்பர்களை இணைத்துக் கொண்டால். ஒரு ஆண்மகன் இவளை சந்திக்க விரும்புதாகவும் அத்துடன் பரஸ்பரம் (Sex) பரிமாறிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். அதற்கு அவள் மறுத்தால், ஆனால் இவளைப்பற்றிய முழுமையாக தகவல்களை பேஸ்புக்கில் வழங்கியிருந்தால் அவையாவன விலாசம், தொலை பேசி இலக்கம் என்பனவாகும்.

மேலும் என்ன நடந்தது அவளது வீட்டுக்குச் சென்று அவளை கற்பழித்து அவளையும் படுகொலை செய்துவிட்டான் அந்த ஆண் மகன், ஆகவே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்!.......................................

இந்த காணோளியைப் பார்த்து உங்கள் உணர்வுகளை கருத்துக்களாக தெரிவியுங்கள் 




READ MORE - True Story of Facebook Murder in Spain(காணொளி இணைப்பு)

மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

Wednesday, August 31, 2011


கிட்டத்தட்ட ஒரு மாதங்களாகியும் இந்த மர்ம மனிதனின் தொல்லை அடங்கிப் போகவில்லை, இன்னும் தொடரவே செய்கின்றன. இலங்கை அரசாங்கம் ஏதோ கூறினாலும் தற்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது எனலாம்.




வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி கோவில் பகுதியில் உள்ள வீடடொன்றில் இன்று 31.08.2011 பிற்பகல் 4.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு மர்மனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களின் ஒருவரை அந்தப் பகுதி இளைஞர்களின் சாதுார்யத்தினால்  மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனைக் கேள்விப்பட்டவுடன் மர்ம மனிதனைக் கொண்டு செல்ல வந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து பொது மக்களினால் அவை தடுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது எனலாம். இவை எல்லாம் பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றது.




கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

மேலும், பிடிபட்ட அந்த மர்ம மனிதனை அறையோன்றினுள் பூட்டி விட்டனர். அதனைப் பார்வையிட பொதுமக்களும் இராணுவத்தினரும் முண்யடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களுக்கும் இராணுவத்தினக்கும் முறுகல் நிலை வலுப்பெற்றது. இருந்தும் இராணுவ உயர் அதிகாரியின் தலையீட்டினால் சுக நிலைக்கு வந்தது.

பிடிபட்ட மர்ம மனிதனை பொது மக்கள் பலமுறையில் தாக்கியதுடன் அந்த மர்ம மனிதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவனால் பதிலளிக்க முடிவில்லை, ஆனால், இராணுவம், பொலிசார் கேட்கும் கேள்விகளுக்கு மத்திரமே அவனால் பதிலளிக்க முடிந்தது. காரணம் அவனுக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம், இராணுவத்தினர் சிங்களத்தில் கேட்டிருக்கலாம்.

மேலும், அவன் தன்னுடைய முகத்தினை படமெடுக்க முடியாதவாறு மறைத்துக கொள்ளும் பாணியில் நடந்து கொண்டான்.

அதன் பிற்பாடு அவனை பொலிசாரிடம் பொதுமக்கள் அவனை ஒப்படைத்தனர்,

 எத்தனை நாளுக்கு உண்மையை மறைக்க முடியும் என்றோ ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும்



குறித்த இளைஞன் காலில் செருப்பும், சேட், ஜீன்ஸ் என்பன அணிந்திருந்தான்.

இந்தப் பகுதியில் அடிக்கடி மர்ம மனிதனின் பீதி இருந்து வந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அததுடன் பிடிபட்ட அந்த நபர் சிங்கள இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

 

 

READ MORE - மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

ஒரு மாதக்குழந்தையின் வயிற்றுக்குள் குழந்தை ஒன்று கண்டுபிடிப்பு(பட இணைப்பு)


இறைவனின் ஏற்பாட்டில் பற்பல விடயங்கள் நடந்த வண்ணமுள்ளன. அதாவது அவற்றை நாங்கள் நம்ப முடியாமல் உள்ளதும், ஆனால் உரிய ஆதாரங்களுடன் நிறுவிக்கும் போது அதனை நம்பத்தான் வேண்டும் இப்படியான ஒரு சம்பவம் தான் நான் இங்கு சொல்லப் போறேன்.

சவுதி அரபியாவில் பிறந்த ஒரு மாதக் பெண் குழந்தை ஒன்றின் வயிற்றுக்குள் இன்னுமொரு குழந்தை இருந்துள்ளதாக அங்கிருந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிறந்த ஒரு மாதமேயான ஒரு குழந்தையின் வயிற்றில் இன்னுமொறு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது உரிய குழந்தை அடிக்கடி வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தக் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஸ்கான் செய்து பார்த்த போது வைத்தியர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் அந்தக் குழந்தையின் வயிற்றுக்குளு் இன்னுமொறு கரு இருப்பதைக் கண்டதனால்.

இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் குழந்தையை உடனே அறுவைச்சிகிச்கைக்கு உட்படுத்தி வயிற்றில் இருந்த கருவை அகற்றியவுடன் தற்போது அது நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணத்தை வைத்தியர்கள் விளக்கும் போது,

குழந்தை தாயின் கருப்பப் பையினுள் இருக்கும் போது தந்தையின் விந்தணு குழந்ததையின் கர்ப்பப் பைக்குள் நுளைந்தமை தான் இந்த நிகழ்வு ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் ஒரு வாக்கினை கீழ் காணப்படும் தளங்களுக்குள் அளித்து என்னை ஊக்கப்படுத்தவும். 

READ MORE - ஒரு மாதக்குழந்தையின் வயிற்றுக்குள் குழந்தை ஒன்று கண்டுபிடிப்பு(பட இணைப்பு)

லிபியா ஜனாதிபதியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்


லிபியாவைப் பற்றி பல்வேறு தகவல்கள் உங்களுக்காக நான் அடிக்கடி எழுதியுள்ளேன். அது போன்று இன்று ஒரு வித்தியாசமான தகவல்களோடு உங்களைச் சந்திக்கின்றேன். தனது 20 வயதில் இராணுவ புரட்சியின் மூலம் ஒரு நாட்டின் தலைவராக வருவது என்பது அவ்வளவு இலகுபட்ட காரியமல்ல, அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 40 வருடங்கள் ஆட்சி புரிவதென்பதும் இலகுபட்ட காரியமல்ல  என்பதையும் நீங்கள் நினைவி்ல் வைத்துக் கொள்ளவும்.

விடயத்திற்கு முந்துகிறேன்..........

கேனல் கடாபி தனது பாதுகாப்பிற்காக பெண்கள் படையணி ஒன்றினை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வைத்திருந்து வந்தார். இவர்கள் விசேட பயிற்சி பெற்றவர்கள் அதற்காக அந்த அரசாங்கம் இவர்களை வற்புறுத்தி படையணிக்குச் சேர்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், இந்த பயிற்சியினை முடித்த பின்னர் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுவர் அவ்வாறு அதில் அவர்கள் சித்தி பெற்றால் மாத்திரம் இந்த அணியில் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் 'அமெசொனியன் கார்ட்ஸ்' என அழைக்கப்படுகின்றனர்.

மேலும், இந்தப் படையினில் உள்ள இளம் பெண்களை பாலியலுக்குப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்ககள் எழுந்துள்ளன.  அதாவது இந்த படையணியில் உள்ள பெண்களை அவர் பதம் பார்த்த பி்ன்னர் அவருடைய மகன் பதம் பார்த்தாகவும், அடுத்த நிலையில் உள்ளவர்கள் இவ்வாறு செய்ததாகும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இதனை சர்வதேச நீதிமன்றில் அவருக்காக குற்றச்சாட்டுக்களுடன் இதனையும் முன்வைப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


READ MORE - லிபியா ஜனாதிபதியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்

அவுஸ்ரேலியாவில் முஸ்லிம்கள் பர்தா அணிவது தடையா?

Tuesday, August 30, 2011


இன்று உலகில் பற்பல நாடுகளில் வித்தியாசமான சட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அண்மைக்காலமாக முஸ்லிம் தங்களை முகத்தை மறைக்கும் பார்தாவை போடக் கூடாது என சட்டங்களை கொண்டுவந்த அதனை அமுல்படுத்திய வண்ணம் உள்ளன.

முதலாவதாக பிரான்ஸ், அடுத்து இத்தாலியும் அதனை அமுல் படுத்துகின்றன. இவ்வாறான விடயங்களில் உலகில் மதரீதியான ஜனநாயத்திற்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது மேற்சொன்ன நாடுகளில் இவ்வாறான பெண்களை ஏனைய பெண்கள் அவதானிக்கும் போது அவர்களுக்குள் இருக்கும் மனசாட்சி இஸ்லாம் மதத்தின் மீது கூடுதலான ஈர்ப்பினை ஏற்படுத்துவதாகவும் அதன் வாயிலாக அந்த நாடுகளில் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்யப்பட்டு வருவதாக அங்கு செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவருவதாக பிரபல பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ளன. நெருப்பில்லாமல் புகையுமா

 

இந்த வரிசையில் ஒரு கண்டத்தில் உள்ள ஒரே ஒரு நாடான அவுஸ்திரேலியா இவ்வாறான சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இருந்தும் அது சற்று வித்தியாசமான சடட்மாகும்.

அங்குள்ள பொலிசார் கேட்டுக் கொண்டால் விலக்கி காட்ட வேண்டும் என்ற உத்தரவாகும். இல்லாவிடில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அண்மையில் அந்த நாட்டில் உள்ள நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய முஸ்லிம் பெண்கள் தங்களுடைய முகத்திரையை விலக்கி பொலிசாரிடம் காட்ட வேண்டும் என சட்டமியற்றப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தை வி்க்டோரியா மாகாணம் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சட்டங்கள் பல்வகைப்பட்ட நாடுகளில் உள்ள மதம் சார்ந்த மக்களின் மனங்களில் தேவையில்லாத பீதிகையும், குரோதத்தையும் வளர்க்க வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய கருத்து.

இந்த ஆக்கம் எந்த ஒரு தரப்பினரையும் தாக்கும் நோக்குடன் எழுதப்படவில்லை என்பதையும் இதனை வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளவும்.

 

 

READ MORE - அவுஸ்ரேலியாவில் முஸ்லிம்கள் பர்தா அணிவது தடையா?

நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் 2011-08-31


அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த 30 நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து இன்று அதற்கான பரிசுப் பொருளான ஈதுல் முபாறக் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் நண்பர்கள் அனைவருக்கும் இன்றை தினம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

நோன்பும் அது தொடர்பான மான்புகளும் பற்றி உங்களுக்கு சிறிய வியடங்களை முன்வைத்து ஒரு சில நிமிடங்கள் நான் பங்கு கொள்ள ஆசைப்படுகிறேன்.

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்:திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை.அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள்.அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள்.அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்:புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


மேலே குறிப்பிட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்பி நான் இத்துடன் முடிவுக்கு கொண்டு வருகின்றேன்
வஸ்ஸலாம்.
READ MORE - நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் 2011-08-31

புதிய Unicode தமிழ் எழுத்து Converter

Monday, August 29, 2011


நாளாந்தம் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காக இணைத்தினைப் பயன்படுத்துகிறோம். அது பரந்து இருக்கும் எமது இதயங்களுடன் தமிழில் செய்திகளை அனுப்ப எங்களால் முடியாமல் போவதும், அடுத்த யுனிகோட்டை மாற்றுவதில் உள்ள சிரமம் இப்படி பல்வேறுபட்ட பிரச்சினைகள் எங்களுக்கு நாளாந்தம் வந்த வண்ணமுள்ளது.
இதற்காக பல்வேறுபட்ட யுனிகோட்ட எடிட்டர்கள் உள்ளன. அவையாவன.................

பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு என்பவாகும். இவற்றினைப் பயன்படுத்தி நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் கிழக்கு மகன் ஒருவனின் முயற்சியில் உருவான ஒரு யுனிகோட் எடிட்டரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
அது தான் தமிழ் யுனிகோட் எழுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள வசதிகள் பின்வருமாறு

·    தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
·    இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
·    இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
·    இதனை குரோம் உலவியில் பயன்படுத்த முடியும்.
·    Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.


இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
 இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அத்துடன்.....................உதாரணமாக thaminglish தெரிவுசெய்து ilanggai  என தட்டச்சு செய்தால் " இலங்கை  " என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏனைய விசைப்பலகை அமைப்புக்களில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடியும். என்பதையும் உங்களுக்கு எத்திவைக்க முனைகிறேன்.
நன்றி
கீழே காணப்படும் இணைத்தி்ல் வாக்களித்து என்னையும் ஊக்கப்படுத்துங்கள்

இதற்கான இணைப்பைப் பெற்றுக் கொள்ள (Tamil Unicode Writter)

READ MORE - புதிய Unicode தமிழ் எழுத்து Converter

 
 
 

Followers

Subscribe!