Google Website Translator Gadget

Universal Child Day - 2011

Friday, September 30, 2011


உலக சிறுவர் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் – 20 ல் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும், இலங்கையில் அது ஓக்டோபர் – 01ம்திகதி நினைவுபடுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் இந்த தினத்தை தங்களுக்கு பொருத்தமான தினங்களில் கொண்டாடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.


மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா பிரகரனத்தின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகில் லட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும்  வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வை இயல்பாகவே அனுபவிக்க வேண்டியவர்களாகவும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற உரிமை உள்ளவர்களாக இருந்தும் அவை அனைத்தும் மறுக்கப்பட்டு அல்லது இல்லாது ஒழிக்கப்பட்டு வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் அiனாதைகளாக அல்லது ஆதரவற்றவர்களாக பிச்சைப் பாத்திரங்களுடன் அல்லலுறும் துன்பியலைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுத கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டு புத்தகம் தூக்கும் கைகளில் துப்பாக்கிகளுடன் சிறுவர் படைகளாக மாற்றப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அந்த வகையில்தான் இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக தொடருகின்ற அகோர யத்தத்தின் சுவாலையில் லட்சக்கணக்கான சிறுவர்கள் தமது வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அபத்த வாழ்வில் சிக்குண்டு  இருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கான சிறுவர்கள் யுத்தத்தின் கோரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  சொந்த நாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் உயிரிழந்த, தமது அவயவங்களை இழந்த குழந்தைகள் ஏராளம். தவிரவும் யுத்தத்தினால் தாய் தந்தை உறவினர்கள் சுற்றத்தார் என்போரை இழந்து சிறுவர் காப்பகங்களின் பாராமரிப்பில் உள்ள சிறுவர்கள் ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமியின் கொடூரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கும் அநாதரவானமைக்கும் காரணமாகியிருக்கின்றன.

வடக்கில் குறிப்பாக வன்னியில் தற்போது தொடர்கின்ற யுத்தத்தால் 40,000 சிறார்கள் இடம்யெர்ந்து இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள தெரிவிக்கின்றன. 35,000 க்கும் மேற்பட்ட சிறார்களின் பாடசாலைக் கல்வி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்றே கிழக்கிலும் கடந்த இரண்டு வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்கின்ற அல்லது மீள் குடியமர்த்தப்படாத 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ளடங்கும் சிறார்கள் பல்வேறு சமூக கலாசார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் அந்த சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்படடதாக பார்வையிட்டவர்கள் தெரிவித்திருந்தனர். நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
READ MORE - Universal Child Day - 2011

இணையத்தில் தேட புதிய தேடுதல் பொறி அறிமுகம்

Tuesday, September 6, 2011


நாங்கள் இதுவரை காலமும் அநேகமானவர்களுக்கு பரிட்சியமான தேடுதல் பொறியாக இருந்து வந்தது கூக்கிள் தேடுதல் பொறியாகும், யாகூ என நாங்கள் குறிப்பிட்டு சிலவற்றைச் சொல்லலாம் ஆனால் இன்று புதிய தேடுதல் பொறி ஒன்றை நான் சொல்லப் போறேன். இதனைப் பயன்படுத்திப் பாருங்கள் இதன் வித்தியாசத்தை உங்களால் உணரமுடிகின்றதா? இல்லையா என்பதை

இந்த தளத்தின் விசேட அம்சம் என்னவெனில் யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்அமேசன் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் தேட வழி செய்கின்றது ஒரு எறியில் பல மாங்காய் வீழ்த்துவது போல் தான் இதுவும் செயற்படுகினறது. அத்துடன் நாங்கள் தேடுவதற்கான வாத்தைகளை வழங்கினால் அது அதிகமாக எதில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெளிவாகச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது. அதாவது அதனை நாங்கள் ஆங்கிலத்தில் Suggestion Keyword என அழைப்போம். தேவையானவற்றை நாங்கள் சுட்டியினால் சுட்டி விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம். இந்த தளமானது விரிவான தேடுதல் நடவடிக்கைக்கு சிறந்த தேடுதல் பொறியாகும்.


அந்த தளத்தின் விலாசம் இங்கே கிளிக் பண்ணவும் 


பிடித்திருந்தால் வாக்களித்து என்னை ஊக்கப்படுத்துங்கள்

READ MORE - இணையத்தில் தேட புதிய தேடுதல் பொறி அறிமுகம்

100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)


நாங்கள் சுகதேகியாக இருந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் 75-80 வயது வரையுமே எங்களால் இயல்பாக நடக்கவும், ஓடவும் முடியும். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் தாத்தாவுக்கே 100 வயது வந்தாச்சி ஆனால் அவர் இன்னும் மரதன் ஓட்ட வீரனாகத் திகழ்வது தான் ஆச்சரியமாகவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா தான் உலகில் மிகவும் வயதான மரதன் ஓட்ட வீரராவார். அதாவது இவரின் சாதனைகளுக்கு வயது வரம்பு கிடையாது 2012 Edinburgh Race பதிவு செய்துள்ள முதல் நபரும் இவர் தான்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் தனது ஓட்டத்தை ஆரம்பித்த இந்த தாத்தா இன்னும் ஓய்வெடுக்க இல்லையாம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 1911 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி பிறந்த இந்த தாத்தா இந்த ஆண்டில் நுாற்றாண்டைக் கொண்டாடினார்.

இவரது உணவு என்ன தெரியுமா இஞ்சியினால் தயாரிக்கப்பட்ட உணவும், ஒரு கோப்பை தேநீரும் தான் அதனை அருந்தியவுடன் தினமும் 10 மைல் ஓடுவாராம். உங்களுக்கு முடிந்தால் 1 மைல் ஓடிப்பாருங்கள் உங்கள் உடம்பின் நிலையை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். மேலும், இந்த தாத்தா அதிக மத நம்பிக்கை கொண்டவராம். அதற்காக வேண்டி அவர் சொல்லுவது எனக்கு கடவுள் வழங்கிய வரம் என அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.




READ MORE - 100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)

அனகொண்டாவுடன் அன்பாய் விளையாடும் அதிசயம் (வீடியோ இணைப்பு)



 அன்பினால் பலவற்றை வசிப்படுத்த முடிமென பல ஆய்வுகள் மூலம் நிருவித்துள்ளான் மனிதம், மலை, மண், நில, நீர், காற்று, விலங்கு ........... இவ்வாறு பல்வேறு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் காலத்தில் பாம்மென்றால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. இங்கு நான் உங்களுக்கு காணொளியாக தரப் போவது மிகப் பயங்கரமான பாம்புடன் அதாவது அதனை அனோகொண்டா என அழைப்பார்கள் அதனுடன் அன்பாக பழகும் ஒரு காட்சியை பார்த்து இரசித்துப் பாருங்கள்


READ MORE - அனகொண்டாவுடன் அன்பாய் விளையாடும் அதிசயம் (வீடியோ இணைப்பு)

அவசரமான ஓட்டமும் அசத்தலான மா. பந்து விளையாட்டினால் மாட்டிக் கொண்ட சீனர் (பட இணைப்பு)

Sunday, September 4, 2011

சிலருக்கு எதை எங்கே எதைச் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தெரியாமல் சிலர் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்றைய நாளாந்த செயலாகி விட்டது சிலருக்கு, இந்த வகையில் சீனர் ஒருவரும். அதிவேகமாக காரை செலுத்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள பெண்ணின் மார்பாகத்தை தொட்டுவிளையாடிய மனிதர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த கமராவின் மூலம் மாட்டிக் கொண்ட பரிதாப சம்பவம் ஒன்று சீனாவில் உளள் சி்க்குள் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. 




மேலும், 80km/h வேகமே அனுமதிக்கப்பட்ட பெருந்தெருவில் 92km/h வேகத்தில் பஜிரோ ரக வாகனத்தை ஓட்டியபடி மேற்குறிப்பிட்ட செயலையும் இந்த நபர் மேற்கொண்டுள்ளார். பொலீசார் இந்த நபரை தேடி வலைவிரித்துள்ளார். 

READ MORE - அவசரமான ஓட்டமும் அசத்தலான மா. பந்து விளையாட்டினால் மாட்டிக் கொண்ட சீனர் (பட இணைப்பு)

மலை உச்சியில் உறங்க முடியுமா?(பட இணைப்பு)


மலையேறுவது என்பது இலகுபட்ட காரியமல்ல அதனை நாட்டுப் பழமொழியில்  ”தரணம் தப்பினால் மரணம்என்று சொல்லுவார்கள் இந்த மலையேறுபவர்ள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் ஒரு விபரிதமான ஒரு நடவடிக்கையாகும். பல மலையேறுபவர்கள் அவ்வாறு வீழ்ந்து இறந்துள்ளார்கள். சாதாரனமாக எமக்கு சுவர் மீது நடப்பதற்கே ஏற்படும் பயமும், லிப்டில்  ஏறும் போது ஏற்படும் பயயுணர்வும் எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தால் உங்களுக்குள்ளே நீங்களே பதிலை சொல்லி விடையைக் கண்டுபிடிக்க முடியும்.









இங்கு நான் உங்களுக்கு தரும் காட்சியைப் பார்த்து உண்மையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்..............................
READ MORE - மலை உச்சியில் உறங்க முடியுமா?(பட இணைப்பு)

நடிகை பூஜாவின் புதுமையான லீலைகள் அலைபேசியில் அலைமோதும் அவலம்!

Saturday, September 3, 2011


இன்று நடிகைகளின் இரகசியங்கள் எங்கு கசிந்தாலும் அவர்களது விடயங்கள் நவீன ஊடகங்கள் ஊடாக உலகைத் தொட்டுவிடும் அளவுக்கு இந்தியா, இலங்கை பாகிஸ்தான் போன்ற அலைபேசிகள் அபரிதமாக அதிகரித்துள்ளதால் சகல தரப்பினரிடமும் அதன் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணமுள்ளன.  வயது 10 தொடக்கம் 100 வயதுள்ளவர்கள் வரையும் அத்துடன் சகல துறைத் தரப்பினர்களுடன் அதாவது மீன் வியாபாரி, கடலை வியாபாரி, கஞ்சா வியாபாரி அப்பப்பா .......... சொல்ல வேண்டுமா......... சங்கதி எல்லாத்தரப்பிலும் இது காணப்படுகின்றன எனலாம்.

மேற்சொன்ன அலைபேசியின் பாவனையால் அதனை பல்வேறு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றன எனலாம், கல்லுாரி மாணவகளை பல கோணத்தில் படமெடுத்தல், அலுவலகத்தில் பெண்களை பல கோணத்தில் படமெடுத்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தல், வெளியிடங்களில் அதாவது நதிகளில் உல்லாசமாக குளிக்கும் போது அதனை படமெடுத்து கிறாபிக் செய்து பல்வேறு தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்த பொலிசார் கண்களை பிதிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உரியவர்கள் பார்த்து இரசிப்பது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடிகை திரிஷா குளியல் காட்சி, ரசிகர்கள் கூட்டத்தில் கசங்கும் ஜோதிகா, உடை மாற்றும் குஷ்பு, ஆடை நழுவும் கிரண், மசாஜ் சென்டரில் திரிஷா, முத்தமிடும் நமீதா என தமிழ் திரையுலக நடிகைகளின் பட காட்சியை கிராபிக்ஸ் மூலம் இண்டர் நெட்டில் ஆபாசமாக உலவ விட்டு அதனை இரசிப்பவர்கள் உள்ளார்கள். ஏன் தனது மனைவியுடன் உறவில் இணையும் போது அதனையும் வீடியோக் காட்சியாக எடுத்து அதனை இரசிப்பவர்கள் உள்ளார்கள்.





இந்த வகையில் குறும்புகாரர்கள் தற்போது நடிகை பூஜா. மாதவன் ஜோடியாக "ஜே.ஜே" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் நடிகை பூஜா. தொடர்ந்து இவர் அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுவம் தற்போது வெற்றிபடமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இலங்கையை பூர்வீகமாக கொண்ட பூஜா தற்போது கொழும்புவில் ஆடம்பரமான வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகை பூஜாவின் ஆபாச படம் "பிசினஸ்மேன் வித் பூஜா" என்ற பெயரில் செல்போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது இவ்வாறிக்க, நடிகை பூஜாவின் ஆபாச காட்சி சென்னை, புதுவை, கோவை, திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே செல்போன் மூலம் வேகமாக பரவி வருகிறது.

இது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆபாச காட்சியில் இடம் பெற்றுள்ளது நடிகை பூஜாவா, அல்லது அவரை போன்ற உருவ அமைப்பு கொண்ட வேறு ஆபாச நடிகையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பொலிசாரின் முதற் கட்ட விசாரணையில் நடிகை பூஜாவின் ஆபாச காட்சியில் கிராபிக்ஸ் ஏதும் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இவை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனை நடாத்திவருகிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

READ MORE - நடிகை பூஜாவின் புதுமையான லீலைகள் அலைபேசியில் அலைமோதும் அவலம்!

 
 
 

Followers

Subscribe!